எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 மார்ச், 2012

அம்மா என்னும் தெய்வம்.

அம்மா என்னும் தெய்வம்.:-
***********************************

அம்மா என் இனிய தேவதையே..!
உலகத்தைப் பார்க்குமுன்
உன் முகத்தைப் பார்த்தேன்...!

மொழி தெரியாமல் இருந்தேன்.
மொழி கற்றுக் கொடுத்தாய்..!

நீ உண்ணாவிட்டாலும்
எனக்கு உணவு ஊட்டுவாய்..!

பலன் எதிர்பாராமல்
பாசம் செய்வது எப்படி
எனக் கற்றுக் கொடுத்தாய்..!

நோயில் நான் விழுந்தால்
நீ நொந்து போவாய்..!

எனக்காக எவ்வளவோ
தியாகங்கள் செய்திருக்கிறாய்..!

உனக்கு சீர் ஏதும் தரவேண்டாம்.
சிரித்து உரையாடினாலே மகிழ்வாய்..!

கடவுள் என்னோடு எப்போதும்
இருக்கமுடியாது என்பதால் எனக்கு
உன்னைக் கொடுத்தார்.!

அம்மா .. ! என் இனிய தேவதையே..!
உனக்கு நன்றி.! நன்றி. !! நன்றி..!!!

டிஸ்கி :- இது எங்கள் வீட்டினருகினில் குடி இருக்கும் ., வாணி வித்யாலயாவில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் குட்டித் தோழி பூஜாவின் பள்ளி மலருக்காக அவள் சார்பாக எழுதிக் கொடுத்தது..:)

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...