எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 டிசம்பர், 2019

வென்று வாழுங்கள்

உதவிக்கரம் நீட்டி ஓடோடி வருவீரே
அபயக்கரம் காட்டி இனி அன்புசெய்ய யாரிருக்கா.
எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேருண்டு.
எம் உள்ளத்தையும் உம்முடன் எடுத்துக்கொண்டு வாழ்ந்து காட்டிச் செல்லுவதும் நீர்தானே.
ஆற்றுக்கால் பகவதி நீர் 
அன்பின் ஊற்றுக்கால் நீர்தானே
வைகையென நீர்சொரிந்த
சொக்கனின் மீனாட்சி உம்மிடம் 
"என் சுந்தரனும் என்னோடு இங்கிருக்க
நீயும் ஒரு சுந்தரனோடு சுகமாக வந்தாயோ
என்னாட்சி மதுரையிலே இனி 
உன்னாட்சியும் நடக்கட்டுமென
வருகவென வரவேற்றுத்
தாய்போலக் கை விரிப்பாள்.
நடக்கட்டும் மதுரையிலே
உங்கள் இருவரின் பேராட்சி
நானிலத்தில் நன்மையே விளையட்டும்.
அமெரிக்க மண்ணைவிட்டு
அன்னை பூமி சென்றபின்னும்
உங்கள் அன்புக்கடிமைகளை 
மறக்காதீர் ஒருபோதும். 
தாயாய்த் தோழியாய் 
யாதுமாய் இங்கிருந்தீர்
தாய்நாடு சென்றபின்னும்
தகவல் தொடர்பு கொண்டிடுக
தாயவளாம் மீனாட்சியிடம்
எமக்காகவும் வேண்டிடுக.
இப்பிரிவு பௌதீகப் பொருண்மைக்குத்தான்.
உள்ளப் பிரிவு நாம் அறியாதது.
உடல் நலம், உள்ள நலன் போற்றி
இன்றுபோல் என்றும் ஒன்றாயிருப்போம்.
வாழ்க வளமுடன்
வென்று வாழுங்கள் மதுரையிலும்.
உங்கள் அன்பெனும் அமுதம்பருகி
இனிது வாழும் விஜி சத்யாவின்
அன்பு முத்தங்கள் ஆயிரம்
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...