எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

கடந்து செல்லும்..

மைல்கற்களுக்குக்
காவலாய் நின்றிருக்கின்றன
சாலையோர மரங்கள்.

உச்சாணிக் கம்பியில்
உரையாடிக் கொண்டிருக்கின்றன
மஞ்சள் இமை மைனாக்கள்.

கடந்துசெல்லும்
ஒவ்வொரு பாலத்தையும்
கடகடத்து அறிவிக்கிறது ரயில்

இன்று நாளை இன்று நாளை
இருப்பும் மறைவும்
லப்டப்பிட்டு உயிர்க்கிறது இதயம்

இருத்தலின் சுயகம்பீரம்
தானே பெற்றுவிடுகின்றன
தினம் மலரும் பூக்கள்.
  

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...