எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

குழப்ப மொட்டு.

தினம் பொழிகிறது மழை
குளிரில் நடுங்குகிறது
பால்கனிச் செடி.

சூரியனின் வெப்பமும்
நிலவின் தட்பமும் கூட
தோராய வீதத்தில்.

மும்மாரி தினமாரியானதில்
அணுங்குவதில்லை என்றாலும்
அணுக்கப் பயத்தில்.

காற்றும் மழையும்
கைகோர்த்துப் பிடித்திருக்கின்றன
பூவாடும் கிளையை.

எத்தனையோ தினம் பூத்திருக்க
குழப்ப மொட்டும் பூவானதை
கிளைவிரித்துப் பார்க்கிறது செடி.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...