எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2018

கர்மம் தொலையாமல்..

பசியெடுத்துப் பிய்க்கும்
வல்லூறுகளின் பிடியில்
அங்கம் கிழிந்தபடி
மரணாவஸ்தையில் எலி.

தண்ணீர்த் தொட்டியின்மேல்
தாகவிடாய் தீராமல் குதற
பொங்கி வழியும் தண்ணீரோடு
எலியின் ரத்தமும் சிறுநீரும்.

நீரிருந்தும் கர்மம் தொலையாமல்
புண்ணியாசனமும்
தர்ப்பணமும் ஒருங்கே
செய்து கொண்டிருக்கிறது தொட்டி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...