வாய்க்கால்களின் கொண்டைகளில்
வண்ணக் கண்ணாடித் தாள்கள்.
தவித்து மூச்சு வாங்குகிறாள்
நீராட்ட வருபவள்.
மண்ணள்ளிச் சேர்த்த கட்டிடங்கள்
மிதந்து கொண்டிருக்கின்றன
நதியின் கருப்பைக்குள்.
மலர்ந்திருந்தவளை மலடாக்கிவிட்டு
நீர்ப்புணர்ச்சி வேண்டித் தவம்.
நீர்த்துப் போய் நீளமாய் வீழும்
அவள் கண்ணீர் கலங்கலாய்த்
தலைகுப்புற வீழ்கிறது கடலுக்குள்.
நீராடுமுன் கைநிறைய நீரள்ளி
அவளுக்கும் அளியுங்கள் பிண்டம்.
இது அவள் இருந்த இடம் என
தடம் குறித்து வைப்போம் வரைபடங்களில்.

வண்ணக் கண்ணாடித் தாள்கள்.
தவித்து மூச்சு வாங்குகிறாள்
நீராட்ட வருபவள்.
மண்ணள்ளிச் சேர்த்த கட்டிடங்கள்
மிதந்து கொண்டிருக்கின்றன
நதியின் கருப்பைக்குள்.
மலர்ந்திருந்தவளை மலடாக்கிவிட்டு
நீர்ப்புணர்ச்சி வேண்டித் தவம்.
நீர்த்துப் போய் நீளமாய் வீழும்
அவள் கண்ணீர் கலங்கலாய்த்
தலைகுப்புற வீழ்கிறது கடலுக்குள்.
நீராடுமுன் கைநிறைய நீரள்ளி
அவளுக்கும் அளியுங்கள் பிண்டம்.
இது அவள் இருந்த இடம் என
தடம் குறித்து வைப்போம் வரைபடங்களில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))