எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

மனமீனும் பரந்த கடலும்

வார்த்தைக் குடுவைக்குள்
சிக்கித் திரிகிறது
மனமீன்.

முன்பே விடை கொடுத்துவிடுகிறாய்
இன்னின்னதுதான் நடக்குமென்ற யூகத்தில்
தப்புவதில்லை உன் கணிப்பிலிருந்து எதுவும்
நிகழுமுன்பே முடிவெடுக்கத் துவங்குகிறாய்
என்பதில் தெரிகிறது உன் சாணக்யத்தனம்
முடிவற்ற வட்டக் குளத்தின் சிற்றலைகளாய்

ஒரு சம்பவம் நிகழ்கிறது
சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி
வெய்யிலின் அனல் அலையாய் அலைக்கழிக்கிறது
சாக்பீஸ் கோடுகளால் சாலைச் சித்திரம் வரைகிறது.
ஒரு புடவையைக் கயிறாக்குகிறது.
கரிக்கட்டையாய் வேகவைக்கிறது.
ஒரு குளம் சிலந்தி வலைபோல் ஈர்க்கிறது.
உறைந்த ரத்தம் விழி நரம்புகளை முறுக்கேற்றி
வாழ்ந்தபோது சொல்ல இயலாக் கோபத்தைத் தெறிக்கிறது.
ஈனத்தனங்களைச் சமாளிக்கமுடியாமல் சமாதியாகிறார்கள்.
அடையாளச் சாம்பலைச் சுமப்பவர்கள்
வீட்டின் வெளியேயே வைக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்களை.
தீர்த்தமாடச் செல்பவர்களின் முங்குதலாய்க்
கழுவிவிடுகிறது ஒரு பரந்த கடல் முன்னெச்சங்களை.
கரையேறுகிறார்கள் கரை ஏறமுடியாதவர்களைக்
கரைத்துக் கழித்த கழிவிரக்கத்தில்.
அலை அடித்துக் கிடக்கிறது ஒன்றின்மேல் ஒன்றாய்.


2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சந்தர்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...