எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

மொக்கு

விடிகிறது ஒரு காலை
பூக்கின்றன உன் நினைவுகள்;
ஒளிவட்டமிடுகிறது மகிழ்ச்சி
தலையைச்சுற்றி வெய்யிலைப் போல.

நிழலைக் கூட காலடியில்
அடக்குகுறது உன் ஞாபகத் தகிப்பு.
கசகசக்கும் உன் நினைவின் வாசத்தோடு
கரைகிறது மாலை.

வண்டுகளாய் முத்தமிடுகின்றன
அந்திச்சூரியனை மேகங்கள்.
விரைந்து வீழ்கிறது
தப்பிய முத்தங்களைத்
துரத்திப் பிடித்தபடி இரவு.

தொடர்கிறது உன் ஞாபகம் மட்டும்
சுருளும் இருளுடனும் கூட.
விடியலில் உன்னைப் பூப்பதற்காய்ச்
சூல்கொண்ட தேனுடன்
காத்திருக்கிறது ஒரு மொக்கு

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...