எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 பிப்ரவரி, 2016

சூன்யம் உரித்தல்

யாரும் குளிக்காத நதியோரம்
சிலும்பும் கரையோரப் பன்னீர்ப்புஷ்பமாய்
நினைவுகள் அலையடுக்கும்.
பாடமுடியாமல் போன
இராகங்கள் நினைந்து
கருவிலேயே உதிர்ந்துபோன
கவிதைகள் நினைத்து
இனமில்லா இனிய சோகங்கள் நினைத்து
இயலாமல் போன ஸ்நேகங்களை நினைத்து
மனமரம் நிகழ்ச்சிச் சருகுகள்
உதிர்த்து ஞாபகச் சுள்ளிகள் அடுக்கும்.
சூழ்நிலைச் ஜல்லிகள் புரட்டி
என் வெளித்தோற்றத்தைத் தார் பேர்த்து
சூன்யம் உரித்து எறும்பு ஒன்று
புற்றுதோறும் அலையும். 

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...