எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 அக்டோபர், 2013

அவனின் அவள்.

ஊருக்குச் சென்றிருக்கலாம்.
கிராமத்துத் திருவிழாவுக்கு,
குழந்தைப் பேறுக்கு,
தாய் வீட்டில் சீராட,
குழந்தைகள் விடுமுறைக்கு,
உறவினர் திருமணத்துக்கு..

குடியும் கும்மாளமுமாகச்
சிரித்துக் கொண்டாடும்
அவனின் அவள்
ஒரு வேளை
மீளமுடியாத் துயிலில்
ஆழ்ந்திருக்கலாம்,
ஒரு கல்லறையில்..
காற்றில் கலந்து இருக்கலாம்
ஒரு பிடி சாம்பலாக..
என்ன செய்கிறோமென விளங்காத
அவன் சிரிப்பின்பின்னே
எங்கு செல்வது எனப் புரியாமல்
ஒளிந்து கிடக்கிறது
அவளுக்கான காதலும்
காமமும் பசலையும்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...