எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2012

அரும்பு இதழுக்காக 2010 இல் எழுதியது.

விசுவாசம்

அங்கிகளுக்குள்
எம்மை மறைத்து
செயலற்று இருந்தோம்..

உமது கண்கள் வழி
கருணை பொங்கி..
எமை அணைத்து..
அரவணைத்து..

எங்கள் துயரை எல்லாம்
எம்மால் சுமக்க
முடியாது என்று
எமக்காய் சிலுவையாக்கி
சுமந்த எம்பெருமானே...


மூன்றாம் நாளில்
முளைக்கும் விதைபோல்
கிளைத்தெழுந்த
எங்கள் பெருமகனே .,

வாழ்வின் நம்பிக்கையே..
எங்கள் நன்மை விளைந்தது..
உங்கள் உயிர்த்தலில்..

அன்பின் தேவே..
நல்லவற்றில்
விசுவாசம் பிறந்தது.
.
நோயுற்றிருந்தோம்..
வலிகளைச் சுமந்தீர்..
தெளிவற்று இருந்தோம்..
ஒளியாய் வந்தீர்..

தனிமையில் இருந்தோம்...
துணையாய் நின்றீர்...
நீதி நாளுக்காய் காத்திருக்கிறோம்...
இரட்சிக்க வருவீர்...

எல்லா நம்பிக்கைகளிலும்
நீவீர் பிறந்து கொண்டே இருக்கிறீர்..
எம்மை ஆறுதல் படுத்தவும்..
ஆற்றுப் படுத்தவும்..

நன்மையின்., அன்பின்.,
விசுவாசத்தின் வடிவே..
உமது வருகைக்காய்..
பூங்கொத்துக்களுடன் நாங்கள்...
வந்தெமை ஆட்கொள்க விரைவில்...!!!

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

A. Manavalan சொன்னது…

Nalla ethirparputhaan iraivanukkana ethirparpu. Iraivaa en thalaivaa varugave varugave entru varaverkirathu visuvasamai Iraivanai - Arumai.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...