எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

உள்விகாரம்

எங்கெங்கோ 
ஓடிக்கொண்டிருக்கிறது நதி
தன்னை மட்டும் நாடி
ஓடிவந்ததாய் மகிழ்ந்து கொண்டிருக்கிறது
விருட்சம்
உயரக்கிளைப் பறவைகள்
உண்மையை ஓங்கி உரைக்கின்றன
எதுவும் செவியேறாமல்
வேர்ப்பாசத்தில் மூழ்கிக் கிடக்கிறது விருட்சம்
விருட்சம் கடந்து 
உள்விகாரம் வெடிக்க
சாக்கடை கலந்து
சந்தனமென நினைத்து
நாராசமாய் மணத்துக்
கடல் ஓடுகிறது நதி. 
 
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...