எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 18 ஜூலை, 2020

சுய சிறை.

மிக நீண்ட வேனிலைப் போல
நகர்ந்து கொண்டிருக்கிறது கொரோனா
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்
விடியற்காலைக் குடுகுடுப்பைக்காரனைப்போல
உலவி நிமித்தம் சொல்கிறது.
ஒதுங்கி ஒளிந்திருந்து அனைவரும்
ஒட்டுக்கேட்டபடி பதுங்கி இருக்கிறார்கள்.
நல்லகாலம் பொறக்குதோ இல்லையோ
கெட்டகாலம் ஒழியட்டுமென
வீட்டுக்குள்ளேயே பித்துப் பிடித்தவர்கள்போல
புதைகுழிப் பேய்களாய்
விழிவிரித்துக் கிடக்கிறார்கள் மனிதர்கள்.
குடுகுடுப்பைச் சத்தம் தேய்ந்து ஓய்ந்தபின்னும்
வாசல்படிகள் திறக்கப்படுவதேயில்லை.
சுயசிறைக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து மிரண்டு
அவநம்பிக்கையோடு தள்ளியே நிற்கிறார்கள்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...