எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 டிசம்பர், 2013

உணர்வுகள் தொடர்கதை.

எப்போதெல்லாம் சந்திக்கிறோமோ
அப்போதெல்லாம் அது முன்பே
நிகழ்ந்துவிட்டதைப் போன்றிருக்கிறது.
முகமன்கள் கூறிக் கொள்கிறோம்.
கை குலுக்கிக் கொள்கிறோம்.
உணவு அருந்துகிறோம்.
பேசியவற்றையே பேசுகிறோம்.
முன்பு பேசியதன் நுனிதொட்ட
களைப்பை உணர்கிறோம்.
காபியின் வாசனையோடு பிரிகிறோம்.
எப்போது சந்திப்போமெனத் தெரியாமல்..
தற்காலிகப் பிரிவா,
நிரந்தரமாவென நிர்ணயிக்காமல்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
சந்திப்பும் பிரிவும்.
உணர்வுகள் மாறுவதில்லை..
ஆட்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள்....

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை...

கார்த்திக் சரவணன் சொன்னது…

நிறைய பேருடன் அப்படித்தான்....

சுரேகா.. சொன்னது…

பின்றீங்களே!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றி ஸ்கூல் பையன்

நன்றி சுரேகா

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...