எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 பிப்ரவரி, 2020

அதன் போக்கில்..

அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்த
ஒரு கரப்பான் பூச்சியைக் கொன்றேன்.
அப்படியே மஞ்சள் தூள் தூவி
ஒரு எறும்பு வரிசையையும்.
எலிக்குச் சில இனிப்பு மாத்திரைகள்.
அங்கங்கே சில வெங்காயத் தோல்கள்
வால் சுழற்றும் பல்லிகளுக்காய்
காந்திக் கொண்டிருக்கிறது.
கணநேரமும் கொசுவிரட்டி.
சமையலறைக் கிருமிகளை
ஒழித்துவிட்டதாய்ப் பெருமிதம் கொள்ள
பலாப்பழத்திலிருந்து மூச்சைப் பிடித்துக் கொண்டு
சுற்றத் தொடங்குகிறது ஒரு ஈ.
மயிர்க்கூச்செறிய தப்பிக்கும் அதனோடு
மட்டையாடிக் கொண்டிருக்கிறேன்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...