எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2019

எனக்கானது

தனிமையின் சூட்டுவெளியில்
கிரிகோர் ஸாம்ஸாபோல்
முடங்கிக் கொள்ள ஏங்கும் மனது
ஒவ்வொரு இரவிலும்
என்னுள் உயிர்க்கும் அவன்
இருளும் மூலையும் தேடி முடங்குகிறான்
இனிச் செய்யவேண்டியது ஒன்றுமில்லை
எல்லா உதாசீனங்களையும் பருகியாயிற்று
எல்லா விரக்திகளையும் துப்பியாயிற்று;
வெய்யில் வந்து சூடுவைக்கும்போது
உயிர்த்தெழ வேண்டியதாகிறது
இன்னும் இருக்கும் நாட்களைக் கடைத்தேற்ற.
இனி இருளும்கூட எனக்கானதில்லை.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...