நானொரு துறவி
பூர்வாசிரமத்தை
விட்டு வந்த துறவி.
தவம் என்னும்
கடமைக்காக
மலையேறிக்
கஷாயம் உடுத்தி
முடிவளர்த்துக் குவித்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
நானுமோர் துறவி.
கனிகாயால் கிளைத்தெழுந்து
கோபமழிந்து
சாந்தம் புகுந்து
இறைமையை அர்ச்சித்து,
தூரதர்சித்து,
நானுமோர் துறவி.
கொட்டையணியாமல்
கட்டை மாட்டாமல்
ஓடு ஏந்தாமல்
நீறு தீட்டாமல்
நானுமோர் துறவி.
-- 82 ஆம் வருட டைரி. :)

பூர்வாசிரமத்தை
விட்டு வந்த துறவி.
தவம் என்னும்
கடமைக்காக
மலையேறிக்
கஷாயம் உடுத்தி
முடிவளர்த்துக் குவித்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
ஜபமாலை உருட்டி
நீரர்ப்பணம் செய்து
நானுமோர் துறவி.
கனிகாயால் கிளைத்தெழுந்து
கோபமழிந்து
சாந்தம் புகுந்து
இறைமையை அர்ச்சித்து,
தூரதர்சித்து,
நானுமோர் துறவி.
கொட்டையணியாமல்
கட்டை மாட்டாமல்
ஓடு ஏந்தாமல்
நீறு தீட்டாமல்
நானுமோர் துறவி.
-- 82 ஆம் வருட டைரி. :)
