எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 டிசம்பர், 2015

வகுப்பறையில் நான்.



வகுப்பறையில் நான்:-

வானமும் பூமியும்
மேகத்தை மழையாய்ப் பிய்த்துச்
சண்டையிட்டுக் கொண்டிருந்த
காட்சியைக் கடைக்கண்ணால் இரசிக்கும்போது
இராமனும் இராவணனும் சீதைக்காகச்
சண்டையிட்டது எந்த இதிகாசம் என்ற
தர்மசங்கடமான கேள்வி ஏன் ?
மரராணிகள் தலைக்குக் குளித்து
உலாத்திக் கொண்டிருந்த
அழகை அனுபவிக்கும்போது
குமரகுருபரரின்
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்
நீராடற்பருவத்தை விளக்கச்சொல்லி
விபரீதக் கட்டளை விதிப்பதேன் ?
சே..! இயற்கையை இரசிக்கத்  தடை விதிக்கும்
இந்த வாழ்க்கை சுத்த போர்.

-- 83 aam varuda diary

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...