ஏதோ ஒரு பத்திரிக்கையின்
அஞ்சலியில்
அவள் தன் முகத்தை
நிதானமாகப் பார்த்தாள்
அவள் நம்பியவர்கள்
துரோகமிழைத்தபோது,
ரகசியமாய்க் காதலித்து
ரகசியமாய் உறவுகொண்டு
அதை அவளறியாமல் உலவவிட்டபோது,
அரவணைத்து
முதுகில் குத்தியபோது,
அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தியபோது
எனப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது
அவளது இறப்பு.
யாருமறியாமல் இறந்து உயிர்த்தவள்
நரையோடிய புகைப்படம்
பார்த்துக் கவலை கொண்டாள்,
"இளவயதுப் படம் போட்டிருக்கலாம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))