எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 மே, 2021

பூக்களோடு பூக்களாய்..

தாமரைகளோடு
அல்லிகளும் மலர்ந்திருக்கின்றன..
பூக்களோடு பூக்களாய்ப்
பூத்திருக்கிறது குளமும்.
கயல்களோடு
குதிக்க இடமில்லாமல்
தவிக்கிறது சூரியன்.
ரீங்காரத்தோடு
இனம்புரியாமல்
அலைகின்றன வண்டுகள்.
வாசனைப் பாலாவியோடு
தண்ணென்றிருக்கிறது வாவி.
எல்லா இதழ்களும்
விரிந்து விடுகின்றன
தண்டுகளோடு 
தண்டுகளாய்த் துழாவிப் 
பூக்களோடு பூக்களாய்
முகம் விரிக்கும்போது..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...