எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 அக்டோபர், 2019

சாட்சி

எழுத்துக்களை இழுத்துக்கொண்டு
முதுவேனில் எறும்புபோல்
வலைப்புற்றில் சேமிக்கிறேன்.
புத்தகக் கதவுகள் கொண்டு
இழுத்துமூடிக்கொள்கிறேன்
கரையான்கள் வரும்வரை
எறும்புத் தின்னிகள்
கைபட்டதும் கரைகிறோம்
கரையானும் நானும்
சேமித்த எழுத்துக்கள்
சிதறிக்கிடக்கின்றன
ஒரு வாழ்விருந்ததன் சாட்சியாய்
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...