எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 ஜூலை, 2018

இயல் உலகம்.

உடலும் நிறமும் கொண்டு
தீட்டப்படும் வண்ணங்கள்
உடலை அறிவதற்குக்
கரை உடைக்கின்றன.

அணையைத் தடுக்கும்
கற்களிலும் விதைகளைப் பாய்ச்சிச்
செல்கின்றன வலசைப்பறவைகள்.

உடல்வேறு மனம்வேறெனக்
கருதும் மனிதர்க்கு
இன்பந்துய்த்தலே இலக்கு.

மனதை உடலாயும்
உடலை மனமாயும்
கருதும் மனிதர்க்கு
இசைவாய் இயல்வதில்லை
இயல் உலகம்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...