எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பேச்சு போதை

நடுயாமம் நீள் இரவு
நெடும்பகல் குளிர்மாலை
இருவராடும் ஊஞ்சலாட்டம்
முன்பின் நகரும்
காற்றாய் கனலாய்
கனிந்து பெருகும்.
எதற்கும் அசையா
நெஞ்சம் நெகிழும்
உருகவைக்கும்
உளறவைக்கும்
பிடித்ததெல்லாம்
பித்தம் பித்தும்
கசப்பும் ருசிக்க
எதையுமருந்தாதிருந்தும்
வார்த்தைகள் சுழலும்
பேச்சுமோர் போதை.

3 கருத்துகள்:

மீரா செல்வக்குமார் சொன்னது…

அற்புதம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செல்வா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...