எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஜூலை, 2013

இறந்த நம்பிக்கைகள்.

கடலுக்குச் சென்றவர்கள்
திரும்பி வரலாம்
விசைப்படகு நிறைய
மீன்களோடு.
வலம்புரிச் சங்கோடு.
குண்டு தப்பிய காயங்களோடு.
வளையல் கிடைக்கும்.
சுறாப்பீலி கிடைக்கும்.
பள்ளி செல்ல உடை கிடைக்கும்.
கருத்தும் சிறுத்தும்
அலையும் மேகங்களோடு
தப்பி வரலாம் படகு
யாரும் சுடாமலே
இறந்த நம்பிக்கைகளோடும்..

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது (கொடூரமாக)...

கவிதை வானம் சொன்னது…

மெல்லிய சோகம்........
யதார்த்தத்தின் பிரதிபலிப்பை
எழுதிய வார்த்தைகள்

பெயரில்லா சொன்னது…

மீனவர்களின் வாழ்வியலையும், வலிகளையும், நம்பிக்கைகளையும் கூறும் அற்புதக் கவிதை..

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன் :(

ஆம் பரிதி முத்தரசன்

ஆம் நிரஞ்சன் தம்பி

நன்றி தனபாலன் மற்றும் சாய்ரோஸ்,

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...