எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 அக்டோபர், 2012

கனிமங்கள் ஒளிர்கின்றன.

கனிமங்கள் ஒளிர்கின்றன.
தனிமங்கள் தவிக்கின்றன.
திரை ஊடுருவிப்பாயும் கதிர்
குகை முடிச்சுக்களைப் பொசுக்குகிறது.
உயிர் உற்பத்திக்கும் சூட்டுப் பெட்டிகள்
மரபணுச் சிதைவில் கருக்கோழிகளாய்
உருக்கொண்டதெல்லாம் ஒழுகிக் கரையும்
ஒளி ஒலியெழப் பெய்யும் அமில மழையில்
குறுவை குறுகிப் போக சம்பா மூழ்கிப் போக
எரிபொருளாய் இளசெல்லாம் எரிய
இருண்ட கண்டத்துள் செயற்கை மணல்
செயற்கை நீர் செயற்கைப் பூக்கள்
செயற்கை சுவாசம் செயற்கை மரணம்.
கருப்பா வெள்ளையா
பாதாளமா, மேலோகமா.
கனிமங்கள் ஒளிர்கின்றன.
தனிமங்கள் தவிக்கின்றன.

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

தங்களின் கருத்தும் நடக்கட்டும்... நடக்கும்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...