எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 அக்டோபர், 2012

தற்காப்பு

உணர்வு உறைகளில்
செருகிக் கிடக்கும்
எண்ணக் கத்திகளை
உருவி ஏந்துகிறேன்
ஏறுக்குமாறாய்த்
தாக்குபவைகளிலிருந்து
தற்காக்கும் பொருட்டு.

குயுக்திகளற்று
சுழலும் அவை
ஒளிப்பொறிகள் தெறிக்க
மின்னுகின்றன
செருக்குகள் அற்று
சுயகம்பீரம் மிளிர.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

செருக்கு எந்நிலையிலும் வரக் கூடாது...

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபால். நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...