எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 மே, 2025

அஞ்சலி

ஏதோ ஒரு பத்திரிக்கையின்
அஞ்சலியில்
அவள் தன் முகத்தை
நிதானமாகப் பார்த்தாள்
எத்தனையோ முறை
இறந்திருக்கிறாள்
எனினும் இது
உறுதி பூர்வமான அறிவிப்பு.
அவள் நம்பியவர்கள்
துரோகமிழைத்தபோது,
ரகசியமாய்க் காதலித்து
ரகசியமாய் உறவுகொண்டு
அதை அவளறியாமல் உலவவிட்டபோது,
அரவணைத்து
முதுகில் குத்தியபோது,
அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தியபோது
எனப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது
அவளது இறப்பு.
யாருமறியாமல் இறந்து உயிர்த்தவள்
நரையோடிய புகைப்படம்
பார்த்துக் கவலை கொண்டாள்,
"இளவயதுப் படம் போட்டிருக்கலாம்"
Related Posts Plugin for WordPress, Blogger...