காணாமல் போகவேண்டுமென்பது
அவளது நெடுநாள் ஆசை.
வசதிகள் அவளைத்
தாலாட்டிக் கொண்டிருந்தன.
வெளி உலகம் பற்றிய பெரும் பீதி
அவளைப் பற்றிக் கொண்டிருந்தது.
உடல் நலம் வேறு தன் திட்டப்படி எல்லாம்
அவளை நகர்த்திக் கொண்டிருந்தது
திரும்பிய புறமெல்லாம் சுவர்.
திரை கூடிய ஒருநாள்
எந்த யத்தனமும் இல்லாமலே
தான் யாரென்பது கூட மறந்து