எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நதி, மரம், சூரியன்.

ஓடிவரும் நதிநீரை
இலைதூவி வரவேற்கிறது மரம்.

வரவேற்கும் விருட்சங்களின்
வேர்வருடி இதமாக்குகிறது நதி.

நதியின் மேல் குதித்து
ஆனந்த நீராடுகிறது சூரியன்

குளியலாடும் சூரியனைக்
கரம் ஏந்திக் களிக்கிறது நதி.

மின்னும் நதியில் 
முகம் பார்த்துக் களிக்கிறது மரம் 

நதி வழி மரமேறி
ஊஞ்சலாடுகிறது சூரியன். 

கொஞ்சும் சூரியனோடும் கெஞ்சும் மரத்தோடும்
ஒட்டியும் ஒட்டாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது நதி. 


  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...