எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2013

86 ஆம் வருஷ டைரி..

31.12.1986 -- 6.10 PM

எனது
வரண்ட நாவுகளில்
எதேச்சையாய்
சில மழைத்துளிகள்.

எனது
சப்பாத்திக் கள்ளிகள்
இன்று பூத்தன.

எண்ணச் சரிவுக்குள்
மனக்குகைக்குள் சில
தீபச் சிதறல்கள்.

வான நெற்றி தீட்டும்
சுடர்த் திலகங்கள்
எனது பேனா வீரனின்
படையெடுத்தலுக்காக.

எனது எழுத்தாணி இன்று
தங்கக் கவசம் விட்டெறிந்து
“இங்க்” திலகமிட்டு
வாள் வீசி முன்னேறும்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

சிறப்பாக வாள் வீசி முன்னேறி விட்டது சகோதரி... வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...