புதன், 26 செப்டம்பர், 2018

கதகதப்பு.

எப்போது வருகின்றன
எப்போது செல்கின்றன
குரலற்ற புறாக்கள்

பால்கனித் தொற்றில்
எச்சங்கள் இல்லை

படபடக்கும் இறக்கைகள்
சிறுகணம் ஒலிக்கும்.

ஜன்னல் விளிம்பில்
கீறல் படாமல்
காற்றுப் பைகளால் செல்லத் தட்டு.

கண்ணுள் வீழாமல்
கவனம் காக்கின்றன.

கதகதப்பை மட்டும் கசியவிட்டு
கதவோரம் சுற்றிக்கொண்டிருக்கின்றன
சில மென் இறகுகள்.

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))