திங்கள், 1 அக்டோபர், 2018

நீயாகிய நான்.

கண்ணோடு கண் நோக்கி
கருத்தொருமித்திருந்த கணம்
யௌவனம் புகுந்தது

யானும் நீரும்
செம்புலம் கலக்க
சாரல் தெறிக்கிறது

இம்மையிலேயே
மறுமை தொடர்கிறது
நீயாகிய நானும்
நானாகிய நீயுமாய்.

  

1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))