செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கொள்ளளவு.

காட்டாறாய் வழிந்து
கொண்டிருக்கிறது
மேல்நிலைத் தொட்டி.

அருவி நீரெனக்
குளியலாடிக் கொண்டிருக்கின்றன
குருவிகள்.

தலையைச் சிலுப்பி
உதறும் துளிகளில்
மிதந்துகொண்டிருக்கிறது
நடைபோட்டுக் கொண்டிருந்த எறும்பு.

நின்று சொட்டும் நீருக்குச்
சாதகப் பட்சியாய்
வாய்விரித்துக் காத்திருக்கின்றன
சில புறாக்கள்.
  

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))