செவ்வாய், 21 நவம்பர், 2017

முச்சந்தி.

ஏன் நிகழ்கிறது
இந்த விசித்திரம்
ஏனெனில் நீ ஒரு தரித்திரம்

வருடந்தோறும்
மலருக்கெல்லாம் வசந்தம்
உனக்கு மட்டும் கசந்தும்.

ஒவ்வொருவருக்கும்
அவரவர் பாதை
நீ ஒரு முட்டாள் முச்சந்தி

இயற்கைக்குக் கூட
உன்னைக் கண்டு இளப்பம்.
உனக்கென்றால்
பருவகாலங்களும் புத்தி பேதலிக்கிறது.

சூழ்நிலைச் சங்குகள்
உன்னைக் கண்டு கத்தும்.
நீ
சும்மா கிடந்த  ஆண்டிபோல்
(உறவுச் ) சுமை தூக்கி அலைவாய்.

உனக்கேன் விரக்தியும் வெறுப்பும் ?
அடித் தேனு !

சந்தோஷமாய் இரேண்டி சனியனே !

-- 82 ஆம் வருட டைரி. :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))