செவ்வாய், 21 நவம்பர், 2017

கள்ளியாய்.

நிலவைப் போலவே
தேய்ந்தும்
வளர்ந்தும்
உன்னுள் எண்ணங்கள்.

நீ
அந்த நிலைத்த சூரியனைப்
போல் இரேன்.

இடித்தவுடன்
நொறுங்கும் கண்ணாடியாய் இல்லாமல்
தேயத் தேயத்
தகதகக்கும் தங்கமாய் இரேன்.

தொட்டவுடன்
சுருங்கும் பூவாய் இல்லாமல்
தண்ணியில்லாக்  காட்டின்
கள்ளியாய்க் களைக்காமலிரேன்.


-- 82 ஆம் வருட டைரி. :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))