திங்கள், 24 ஆகஸ்ட், 2020

நானென்ற ஒன்றா..

ஆயிரம் நிலவை அழைத்தவர்
மூச்சுள்ளும் 
உன்மத்தம் பிடித்தலைகிறது
கிருமி அலை..
அவ்வலை சிந்தும் துளிகளில்
நான் யார் நீ யார்
என்றொரு ஆராய்ச்சி நடக்கிறது
ஒவ்வொரு அலையாய்ப்
பிடிந்தலைந்தும்
குழப்ப முடிச்சுக்கள்
கரையில் தள்ளுகின்றன
யோசித்தும் சுவாசித்தும்
பிழைத்துக் கிடப்பது யார்
நானா  .. நானென்ற ஒன்றா.. 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))