வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பயன்..

மூச்சுக் குழலுக்குள் 
முக்குளித்து மூச்செடுக்கிறது.
சாதா காய்ச்சலும் காங்கையும்
சள்ளைப் படுத்துகிறது.
கொடுமை கொடுமை என
கோவிலுக்கும் செல்ல விடுவதில்லை. 
என்னே பயன் எனில்
தனித்தனியாய்க் கிடந்தோரை
தனிமையில் தள்ளுவதுபோல்
குடும்பங்களை ஒன்று சேர்க்கிறது 
கொரோனா.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))