புதன், 26 ஆகஸ்ட், 2020

ஆலமும் காலமும்

தலையிலிருந்து வால்வரை
விழுங்கி விழுங்கி
உயிர்க்கின்றன அரவுக் கிரகங்கள்
விழுங்கும் ஒவ்வொருமுறையும்
வாதாபியாய் வெளிப்படுகிறேன்
எப்போது ஜீரணமாவேனென்பதை
தர்மராஜனே அறிவான்
ஆலமும் காலமும்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருக்கின்றன. 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))