வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மழையாடுதல்.

சொல்பேச்சு கேட்காமல்
இழுக்க இழுக்க வராமல்
பால்கனியில் ஒளிந்து
க்ரில் கம்பி பற்றி
துளிர்த் தலை நீட்டி
மழையாடிக் கொண்டிருக்கிறது
தொட்டியிலமர்ந்த
வெற்றிலைக்கொடி ஒன்று

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))