வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பவளமல்லிக் குழந்தை.

பூம்பொழில்
வெண்முகம்
செஞ்சிவப்புக் கால்
பகல் தந்தை.
இரவுத் தாதி.
பற்றியிருக்கும்
தோளசைத்துக் கீழிறங்கிப்
பச்சைப்புல்லில் தவழும்.
ஒற்றை ஒற்றையாப்
பொறுக்கிப் பார்க்க
உள்ளங்கைக்குள்
நட்சத்திரச் சக்கரம்.
பிரசவித்த தாய் மரமும்
பச்சைக்குழந்தைப் பவளமல்லியும்
அவர்கள் வாசத்தை ஏந்தியபடி நானும்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))