திங்கள், 23 மே, 2016

கண்ணுக்குள் முள்ளை வைத்து :-



கண்ணுக்குள் முள்ளை வைத்து :-

ஓடுகின்ற தண்ணீரில்
படம் வரைந்து வரைந்து
பார்த்தாலும் அது
கலைந்து கலைந்து
போய்க்கொண்டேதான் இருக்கும்.!
வாய் முரிந்த பானையில்
சோறாக்கலாம். ஆனால்
ஓட்டைப்பானைன்னு ஆயிட்டப்பறம்
என்ன செய்ய முடியும். ?
மனப் பட்டம் பறக்கலாம்
உயர உயர…

ஆகா !
நூல் அறுந்து போச்சே !
என்ன செய்ய !
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார்..

அளவுக்கு மீறின சந்தோஷத்தையும்
துக்கத்தையும் அடக்குறது ரொம்பக் கஷ்டம்.
ரொம்ப ஆபத்து.

வெள்ளைத்தை அணை கட்டலாம்.
ஆனா அது நாளையே
உடைப்பெடுக்காது
என்பதில் என்ன நிச்சயம்.

சுவரில் முட்டிய பந்துபோல்
அனுப்பிய கவலைகள்
சென்றதை விட
அதிவேக விரைவில்
எனைப் பற்றிக்கொள்ள
ஓடி வருகின்றன.

எங்குமே
ஏன் கடவுளின் ஆலயங்களில் கூட
நிம்மதி கிடைக்கவில்லை.

ஏனெனில் அவை கூட
இப்போது வியாபார கேந்திரங்களாக
மாறிவிட்ட காரணத்தால்.

 -- 80 ஆம் வருட டைரி. 
 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))