வியாழன், 27 நவம்பர், 2014

”நான்” யந்திரம் நலம்.



”நான்” யந்திரம் நலம்.

வேலை எறும்புகள்
சுமைதாங்கிகளாகும்.,
கல்லும் குழியும்.

மலைச்சாமி கைவேல்
சனத்தின் நாக்கில்.

வாசலில்
அலங்காரக் காகிதத் தோரணமாய்
வாழ்க்கை தொங்கும்.

விட்டில் பூச்சிகளாய்
எதிர்பார்ப்புகள்

விளக்கின் வாய்களாய்
நடப்புகள்.

கிணற்றுக்குத் தாகம்
கடலுக்குமா

திரிகள் இல்லாமலும்
மெழுகுகள் கரையும்

கரைகளுக்குள்
நீர் சுண்டும்.

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))