புதன், 19 நவம்பர், 2014

பாத்திரங்கள்,



ஒளிச் சக்திகளை
உள்வாங்கிச் சூடடக்கி
வெளிச்சச் சக்கைகள்
வெளித்தள்ளும் பாத்திரங்கள்.

கூரைகளின்
கட்டுமானங்கள்
அடுப்புகளின் மேல்

கடப்பைக் கற்களின்மேல்
ஆரோகணிக்கும்
நெருப்புக்குதிரைகள்.

தோட்டத்தில் ரோஜா
முள்கத்தியின் ஆதாரத்தில்

தென்னைகள் முற்றி
விதையாகும் அனுபவமாய்

ஜன்னல் கதவுகளில்
அறைபடும் காற்றாய்
வாழ்க்கையும்.

-- 84 ஆம் வருட டைரி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))