சிலுவைப்பாடு.
பிறப்பையும்
மீட்சியையும்
வரைந்து வைத்திருக்கிறோம்.
தேவைப்படும் கணங்களில்
நினைவு கூர்கிறோம்.
ஒன்றை மாற்றி
மற்றொன்றை மாட்டி
நாட்காட்டிகளாய்
தாள்களைத் துறந்து
மீளவும் உயிர்க்கிறோம்.
சுரூபங்களைக்
கழுத்தில் அணிவதோடு
தீர்கிறது நம் சிலுவைப் பாடு.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!