செவ்வாய், 2 ஜூலை, 2013

ஆட்டுப் பிழைப்பு.

ஆட்டுப் பிழைப்பு..:-
****************

பிறந்துவிட்டது
புழுக்கைகள் நிறைந்த
ஆட்டுக் கொட்டாரத்தில்.

வெறுந்தசை வளர்த்தது
கசக்கும் வேப்பந்தழையில்.

பிடிக்கவில்லை
அதற்குத் தன்னை
உடலப்பிய ரோமங்களோடு.

துள்ளித்துள்ளி முட்டியது
கிடையிலிருந்து விடுவிக்கும்படி.

முட்டி முடங்கி
அசைபோட்டு அழுதது
கிடாய்ப்பிழைப்பு இதுவென..

இருந்தும்
வதைக்கூட அரிவாள் சாணையின்
முத்திரைச்சத்தம் அழைக்க
மலங்க மலங்க
விழித்தபடியே சென்றது,
முடிவுக்கு வந்த போராட்டத்தைக்
கைவிட இயலா ஆடு.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))