ஆமைகள்..
ஆமைகள் அதிகம்
கடலோரங்களில்..
குடக்கூலியில்லை..
குழிபறித்து முட்டையிட்டுக்
குஞ்சு பொறிக்கக்
கையூட்டில்லை.
நினைத்தபோது நீந்தி
நினைத்தபோது கரையேற
குடியேற்றக் கூலியுமற்ற
மணற் தேரி.
நினைத்தபோது
மனிதர்கள் சுடவும் கூட..
ஆமைகளற்ற போதில்
அகதிகளும், மீனவர்களும்..
சரியாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்குநன்றி தனபால்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!