ஒருவரின் மனமாய்.
மல்லி முல்லை
மகிழம் பிச்சி
முகிழ்த்து மணக்கிறது
பண்ணைத் தோட்டம்..
டேலியா கினியா
ரோஜா குறிஞ்சி
குளிர்ந்து சிலிர்க்கிறது
எஸ்டேட் காம்பவுண்டில்..
இரண்டும் இடம்மாறி
எஸ்ஸென்சுகளாகி
போத்தல்களில்
குதூகலமாய்ப் பயணிக்கிறது..
அடையாளமற்றும்
கசிகிறது வாசனையாய்..
ஒருவரின் மனமாய்
இன்னொருவரின் மனத்தில்..

மணக்கும் வரிகளை ரசித்தேன் மனதில்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...