நீர்க்கங்கு..
மீன் செதிலாய்
மினுமினுக்கிறது நதி
துடுப்புத் தூரிகையில்
மீன்பிடிக்கும் ஓவியன்
துணையோடலைந்து
அணையை அளக்கிறது பறவை.
நிழற்சாம்பல் பூக்க
நீர்க்கங்கை அடக்குகிறது அணை..
பச்சைப் புன்னகையில்
குழலசைத்துக் கிடக்கின்றன மரங்கள்..
வெய்யில் வலை விரித்து
கணங்களை விழுங்கிக்
கடக்கிறது காலம்..:)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!