புதன், 6 மார்ச், 2013

புளியமரப் பிசாசு

விஷத்தின் அடர்த்தியோடு
அதி வீர்யம்
விஷயத்தின் அடர்த்தி.

கொத்திச் செல்வதில்லை
யாரையும் என்றபோதும்
கொத்துப் பட்டது உண்மை.

கால்களற்றது என்றாலும்
முகத்தில் மோதுகிறது
புளியமரப் பிசாசு.

தர்க்கித்து தர்க்கித்து
இல்லாத ஒன்றை
வாரி வழித்து வீசிச் சென்று

ராக்குளத்தில்
முகம் தேட
ஒன்றும் தெரிவதில்லை
சூனியம் தவிர


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))