திங்கள், 18 பிப்ரவரி, 2013

செயல்படுபொருட்கள்.

ஒற்றை அலையைப் போல
இன்னொன்று இல்லை..
தனித்து(வமாய்)ப் பிறக்கிறது
ஒவ்வொன்றுமே..
மண்ணைத் தின்னமுயன்று
மண்ணிலேயே கரைசேரும்.,
மடிந்து மடிந்து பிறக்கும்
ஒவ்வொரு அலையும்
எழுவாய் பயன் நிலை
செயப்படுபொருளாய்
விரிகிறது வெவ்வேறு
செயல்படு பொருட்களால்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))